Subscribe Us

header ads

தனிப்பட்ட முறையில் நிவாரணம் வழக்குவோருக்கு பாதுகாப்பு பிரிவினர் கோரிக்கை!


வெள்ளப்பெருக்கு காரணமாக அனர்த்தங்களுக்கு உள்ளவர்களுக்கான நிவாரணங்களை தனிப்பட்ட முறையில் சென்று பகிர்ந்தளிக்க முயற்சிக்க வேண்டாம் என பாதுகாப்பு துறையினர்
பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நிவாரணப் பொருட்களை பாதுகாப்பு படையினர் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலயங்கள் ஊடாக முன்னெடுத்துச் செல்லப்படும் மத்திய நிலையங்களிடம் கையளிக்குமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பண்டங்களை பகிர்ந்தளிக்கும் போது சில இடங்களில் சன நெருக்கடி ஏற்படுவதால் நிவாரண செயற்றிட்டங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே பாதுகாப்பு தரப்பினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments