மக்களின் நலனுக்காக கடுமையான தீர்மானங்கள் எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு இலத்திரனியல் ஊடகங்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மையை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் சில கடுமையான தீர்மானங்கள் எடுக்க நேரிடும்.
எனது பொறுமையை சில தரப்பினர் பிழையான விளங்கிக் கொண்டுள்ளனர்.
நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதே எனது முதன்மை நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
0 Comments