Subscribe Us

header ads

5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை!


1977ஆம் ஆண்டு சட்டப்படி 5 வயது முதல் 14 வயது வரையிலான பிள்ளைகள் பாடசாலைக்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அதனை 16 வயது வரையில் அதிகரிக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர பிள்ளைகளின் பாடசாலை வரவுகள் தொடர்பில் கண்காணிக்கும், பொறுப்பு வலய கல்வி அதிகாரிகளை கொண்ட குழுவுக்கு நியமிக்கப்படவுள்ளது.
இவர்கள் பாடசாலை இடைவிலகல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுப்பார்கள்.
இந்தக் குழு, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments