Subscribe Us

header ads

அரநாயக்கா : குப்பைத் தொட்டிக்கு செல்லும் உணவுப் பொதிகள்…


அரநாயக்கவில் மண்சரிவால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்திருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் எவரும் சமைத்த உணவுகளை அதிகம் எடுத்துவர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொண்டுவரப்படும் மேலதிக சமைத்த உணவுகள் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் நிலைமை தென்படுவதாகவும், இதன்பொருட்டு உதவிகளை வழங்க விரும்புவோர் தமது பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் கேகாலை மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வணசூரிய தெரிவிக்கின்றார்.

அத்துடன், உணவுகள் மற்றும் நிவாரணங்களை வழங்க விரும்புவோர், முன்கூட்டியே 071 44 29 961 (குமாரி), 071 44 26 380 (விஜேசிங்க) எனும் இலக்கங்களுடன் தமது பிரதிநிதிகளை தொடர்புகொள்ளும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமைத்த உணவுகளுக்குப் பதிலாக ஆண், பெண் இருபாலாருக்குமான உள்ளாடைகள், துவாய்கள், விரிப்புக்கள், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் கோப்பைகள், கரண்டிகள், விளையாட்டுப் பொருட்கள் என்பனவே தற்போது அதிகம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments