Subscribe Us

header ads

முகநூலிலும் அணர்த்தமா!!


என்னைப் பொறுத்தவரை தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் எவரும் எவரையும்விட சலித்தவர்களல்ல என்று சொல்லுமளவிற்கு அனைத்து தரப்பினரும் அணர்த்த சேவையில் சிறப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறி்ப்பாக நாம் மட்டும்தான் இச்சேவையின் சொந்தக் காரர்கள் என்பதுபோல்! இயக்க ஆடைகளுடன் விதவிதமான போட்டாக்களைப் பிடித்து, ஏனைய அமைப்புக்களை மட்டம் தட்டி, தற்புகழ் தேடும் சிலரது கோமாளித்தனம் வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

> இஸ்லாமிய இயக்கங்கள்

> பள்ளி நிர்வாகங்கள்

> இஸ்லாமிய நிறுவணங்கள்

> தனியார் கம்பணிகள்

> அரசியலமைப்புக்கள்

> இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட இளைஞர் குழுக்கள்.....

உற்பட மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயப் பணிகள் சுறுசுறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. "அல்ஹம்ந்துலில்லாஹ்"


மனிதம் மறந்த மனிதர்களது உள்ளத்தில் மனிதத்தைப் பதிந்து, குரோதம், விரோதம், பொறாமை எனும் விஷங்களை அகற்றத்தான் இச்சந்தர்ப்பத்தை இறைவன் ஏற்படுத்தினானோ என்றென்னுமளவிற்கு மனிதநேயத் தொண்டுகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்பணியில் இம்மண்ணில் இயங்கும் எவ்வியக்கத்தையும் சற்றும் குறைகூற முடியாது என்பதே மறைக்க முடியாத உண்மையாகும்.

எனினும்!...

களத்தில் இருந்து செயலாற்றும் ஒருவரது பணியை ஒன்பது வடிவத்தில் போட்டோ பிடித்து, (கேவளம்) தன்னைத்தானே செல்பியடித்து, இயக்கம் வழர்க்க இதனை சந்தர்ப்பமாக்க சில சில்லறை அறிவாளிகள்(?) முயற்சிக்கின்றனர்.


அவர்களுக்கேற்றால் போல்! களத்தின் உண்மையான நிலையை அறியாத பலர், வெறும் கீ போர்ட் வீரர்களாக வீட்டில் அமர்ந்து கொண்டு "இவர்களை விட்டால் ஆளில்லாதது போல் கற்பனைகளை கருத்தாக எழுதித் தள்ளுகிறார்கள்.

நிதானமிக்க நடுநிலையான எழுத்தாளர்களில் பலர் கூட! இந்த கோமாளிகளின் விளம்பர மோகத்தில் சிக்குண்டு, விளம்பரப் பிரியர்களுக்காக வாதிடுவது இந்நாளின் முகநூல் துர்ப்பாக்கியம் எனலாம்.

களத்தில் நடக்கும் பணியில் இவர்களும் பங்காளர்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால்! இவர்கள்தான் முழுமையாக களத்தில் ஈடுபடுகிறார்கள் எனும் மாயக்கறுத்தை விதைப்பதானது மிகப்பெறும் அநியாயமாகும்.

இந்த விளம்பரமோக விஷக்கறுத்தால் பாதிக்கப்படுவது ஏனைய அமைப்பினர் மட்டுமல்ல! இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களால் ஆற்றப்படும் சேவைகளும் சேர்ந்தே பாதிக்கப் படும் என்பதை அறிவுள்ளோராயின் புறிந்து கொள்ளுங்கள்.

எல்லா அமைப்பினரும் களத்தில் உள்ளார்கள் என்பதும், ஒரு அமைப்பினர் மட்டும் தன் சேவையைவிட மெருகூட்டி, ‪#‎பில்டப்‬கொடுத்து, விளம்பரம் செய்கிறார்கள் என்பதும் மறுக்க, மறைக்க முடியாத உண்மையாகும்.

‪#‎குறிப்பு‬- (இடுப்புவரை மாத்திரம் நீர் நிறைந்த ஓர் இடத்தில், சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது! நீரினுள் குனிந்து கழுத்துவரை நீரில் மூழ்கி செயலாற்றுவது போல் ஒருவர் போட்டோ பிடித்ததும், அப்போட்டோவை முகநூலில் வளம் வரச் செய்து புகழ் தேடுவதும் என்னை ஆச்சரியப் படுத்தியது. மட்டுமல்லாது இந்தக் கோமாளிகளை பார்த்து ஏனைய இயக்க தலைவர்கள் பாடம் பெறட்டும் என்று பிரச்சாரம் வேறு பண்ணுவதையும் முகநூலில் அவதானித்த போதே என்கரம் எழுத முன்வந்தது.)

எனவே வீட்டில் அமர்ந்து கொண்டு, முகநூலை மட்டும் பார்த்து தவறான தீர்மானத்திற்கு வரவேண்டாம் என்றும், குரோதங்களுக்கு விலை போக வேண்டாம் என்றும், வீண்தர்க்கங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் என் அறுமை வாசகர்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது இயக்கம் வளர்க்கும் தருணமல்ல. மனிதம் வளர்க்கும் தருணமிது என்பதை உணர்வோமாக.

>>அபூ ஸுமையா<<

Post a Comment

0 Comments