புல்மோட்டை சிறுகடல் மீனவர்களின் பிரட்சினைக்கு தீர்வு காணும் முகமாக பாராளுமன்றத்தில் கடல்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, மீனவர்சங்க தலைவர் சைபுதீன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பயனாக அப்பகுதியில் தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அமைச்சர் அனுமதி அளித்து இவ்வனுமதியை உடனே அமுல்படுத்தும் படி கடல்தொழில் திணைக்கள பணிப்பாளருக்கும் அறிவித்தார்.
அத்துடன் அப்பகுதிகளில் உரிய ஆய்வுகளை முன்னெடுத்த பின்னர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பின்றி இப்பிரட்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்டுவதாகவும் முடிவெடுக்கப்பட்டது







0 Comments