ஒரிரு நாட்களாக பெய்து வரும் காற்றுடன் கூடிய தொடர் மழையினால் புத்தளத்திலுள்ள 80% மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ஏழைக்குடும்பங்கள் தங்களுக்குரிய தொழிலை செய்துக்கொள்ள முடியாமையினால் ஒரு வேலை சாப்பாட்டுக்கு போராட்டம் நடத்துகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்மழை ஆரம்பித்து இன்றுடன் 3 நாட்களாகியும்
*புத்தளத்திலுள்ள அதிகாரம் படைத்த எந்த ஒரு அரசியில் வாதியாவது பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்களா???
*பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் மனது குளிரும் வகையில் ஒரு ஆருதல் வார்த்தையாவது கூறினார்களா???
ஏழை மக்களின் ஒரு வேலை வயிற்று பசியை உணராத சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல் வாதிகளை நினைத்தாலே வெட்கமாகக இருக்கின்றது
சில வேலை ஜனாதிபதி அடுத்த மாதம் நகரசபை தேர்தல் என்று உத்தியபூர்வமான அரிக்கை விட்டிருந்தால் இன்று எத்தனை அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உதவிகரங்களை நீட்டியிருப்பார்கள்.
-Hameed Ushama-


0 Comments