ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் அதிகாலை உட்புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் சிலர் படுக்கையில் இருந்த போது கோடாரியால் கொத்தியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.தர்மலிங்கம் நடேஸ்வரன் வயது(46) என்ற ஆசிரியரே இவ்வாறு நெஞ்சில் கோடாரி கொத்துக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொள்ளையடிக்க வந்தவர் இத் துணிகர நடவடிக்கையினை மேற்கொண்டார்களா? அல்லது ஏதாவது தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இக் கொலை முயற்சி இடம்பெற்றதா? என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் பொலிஸார் சந்தேக நபர்கள் விட்டு சென்ற தடயப்பொருட்கள் மற்றும் விரல் அடையாளங்களை பதிவு செய்துள்ளனர்.
0 Comments