சீனாவில் குழந்தையொன்று 15 கைவிரல்களையும் 17 கால் விரல்களையும் கொண்டுள்ளது. இக் குழந்தையின் பெற்றோர் சீனாவின் தென் பிராந்தியத்திலுள்ள குவாங்டோங் மாகாணத்தின் ஸெஷன்ஸென் நகரில் தொழில்புரிபவர்கள். இவர்கள் மத்திய பிராந்தியத்திலுள்ள ஹுனான் மாகாணத்தின் ஸோங்பிங் எனும் கிராமத்திலிருந்து வந்தவர்களார்.
3 மாத வயதான இந்த ஆண் குழந்தையின் இடது கையில் 8 விரல்களும் வலது கையில் 7 விரல்களும் காணப்படுகின்றன. ஆனால், இரு கைகளிலும் பெரு விரல் இல்லை. ஹொங்கொங் என இக் குழந்தை அழைக்கப்படுகிறது.
இக் குழந்தையின் தாயாருக்கும் கை, கால்களில் மேலதிகமாக தலா ஒரு விரல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இக் குழந்தையின் தந்தையான ஸோ சென்ங்லின் இது தொடர்பாக கூறுகையில், “எனது மனைவிக்கு கைகளிலும், கால்களிலும் மேலதிகமாக தலா ஒரு விரல் உள்ளது.
எனவே இந் நிலை மரபியல் ரீதியாக எமது குழந்தையையும் பாதிக்கும் என நாம் கவலைகொண்டிருந்தோம். இதனால், கர்ப்ப காலத்தில் ஷென்ஸென் நகரிலுள்ள 3 பெரிய வைத்தியசாலைகளில் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்டோம்.
எனினும், மருத்துவர்கள் குறைபாடு எதையும் கண்டறியவில்லை. எனவே, எமது குழந்தை 15 கை விரல்களுடனும் 16 கால் விரல்களுடனும் பிறந்தமை எமக்கு அதிர்ச்சியாகவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இக் குழந்தையின் மேலதிக விரல்களை சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவதற்கு 1.1 கோடி ரூபா வரை செலவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந் நிதியை திரட்டுவதற்கு உள்ளூர் நலநிதியங்களின் உதவியை நாடுவதற்கு இக் குழந்தை யின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.





0 Comments