மேலும் அவர் கூறுகையில் இந்தப் போலி அரசியல் வாதிகளை புரட்டிப் போட்டு தோலுரிப்பதே நமது புரட்சியாளர்களின் வேலையாக இருக்கவேண்டும் பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும் ஆனால் இவர் இவ் இவ்விடயத்தில்முடங்கி க் கிடப்பது பற்றி கிழக்குச் சமூகம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும்.
இதற்குக் காரணம் என்ன? பண பலம் உடையோர், பல தடவை கட்சி விட்டு கட்சி மாறும் கொள்கை ஒன்றில்லா அரசியல் வாதிகள் ,பதவிக்காக அலைந்து திரியும் அரசியல் வாதிகள் , இவ்வாறனவர்களைத்தான் நம் சிறு பான்மைச் சமூகம் அரசியலுக்கு வரவேட்கின்றது. இதன் பலன் இச் சமூகம் அவர்களது உரிமைகளை படிப் படியாக இழக்கின்றது.
சிறு பான்மைச் சமூகம் தங்களது கட்சிகளைத் திட்டி திட்டியே சமூத்தின் அரைவாசி உரிமைகள் அழிந்து விட்டது
எனவே சந்தர்ப்பத்தைத் தவற விடாது கிழக்கு மாகாண முதல் அமைச்சர் வடக்கும் கிழக்கும் இணைப்பை எதிர்த்து மக்கள் சார்பாக பகிரங்க அறிக்கை ஒன்றை உடனடியாக விடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்


0 Comments