இன்று புதன்கிழமை(20) அதிகாலை இஸ்ரேலிய இராணுவத்தால் பாலஸ்தீனைச் சேர்ந்த மூன்று பல்கலைக்கழக மாணவிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக எதுவித காரணமுமின்றி சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலதரப்பட்டோர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் பலஸ்தீன எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிசூடுகளை நடாத்துவதும், அப்பாவி பொதுமக்களை கைதுசெய்வதும் தொடர்ந்தவண்ணமேயுள்ளது.
இஸ்ரேலியர்களின் இச்செயற்பாடுகள் குறித்து பல்வேறு அமைப்புக்கள் கண்டனங்களையும் அதிருப்தியையும் வெளியிட்டுவருகின்றன.
நஸார் இஜாஸ்
0 Comments