Subscribe Us

header ads

எமது நட்பு வட்டத்தில் ஒரு பெரிய சன்டை போய்க் கொண்டு இருக்கின்றது.


சகிக்க புடியாத அளவுக்கு அது எல்லை மீரிக் கொண்டு போகிறது.

இந்த பிரச்சினையில் யார் சரி யார் பிழை என்ற வாதத்துக்கு நான் வரவில்லை.



ஆனால் தயவு செய்து எல்லோரும் நிறுத்திவிடுங்கள்.

பேசுவதற்கும் பகிர்வதற்கும் ஆயிரம்  நல்ல விடயங்கள் இருக்கின்றன.



ஷீயா -சுன்னி - முஸ்லிம் -காபிர்  இலக்கியம் - இஸ்லாம் என்று ஆரம்பித்த  சண்டைகள் இன்று ஓன்ட உம்மா ஓன்டா வாப்பா என்று தூசனம் பேசுமளவுக்கு வளர்ந்திருக்கின்றது.


வாழ்க்கையில் சந்தித்தே இல்லாத மனிதர்களுடன்உறவு கொண்டாடுவதற்கும் பக்கத்துவீட்டுக்கரனுடன் பகைத்துக் கொள்வதற்கும்தான் இந்த முகநூல் எம்மை பயிற்றுவித்திருக்கின்றது.


இலக்கியம், மார்க்கம், அரசியல் என்று எவ்வளவு வேண்டுமானாலும் சன்டை பிடித்து முரண்பட்டுக் கொள்ளலாம் அவ்வாரான சண்டைகள் ஆரோக்யமானதே.


ஆனால் அது ஒரு தனிமனிதனின் மானத்தோடு  விளையாடும் நிலைக்குத் தள்ளப்படுவதுதான் வேதனை.


ஒரு மனிதன் தவறே செய்தாலும் அதை பொதுவெளியில் அம்பலப்படுத்தி அவனைக் கேவலப்படுத்துவதில் இருந்து முகநூலில் இருக்கும் ''தூய்மையானவர்கள்'' தவிர்ந்து கொள்ள வேண்டும்.


இங்கே உருவாகும் சண்டைகள் வெறும் மாயை மட்டுமே.

கொஞ்ச நாளில் அது சம்பந்தமே இல்லாத ஒரு தளத்துக்கு சென்றுவிடும்.


சண்டை பிடித்தவர்கள் சேர்ந்துவிடுவார்கள் ஏத்திவிட்டவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.


ஒருவன் பிழை செய்கிறான் அவனை அடக்கவேண்டும் என்று சொல்பவர்களும் அதே தவரை திரும்பத் திரும்பத் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.


சொந்த ஐடியில் நியாயம் பேசிவிட்டு பேக் ஐடியில் எதிரியின் உம்மாவை இழுத்து ஏசுகிறார்கள்

.
தயவு செய்து எல்லோரும் இதை நிறுத்துவிடுங்கள்  இந்த செயற்பாட்டால் யாருக்கும் எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை.


நல்ல பதிவுகளை எழுதும் நல்ல நண்பர்கள்கூட இந்த வலைக்குள் சிக்கி அவர்களது சுவரை அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.


ஒரு மனிதனிடம் ஒரு கெட்டபழக்கம் இருக்கிறது என்பதற்காக அவரை முழுமையாக வெறுக்கும் அதிகாரத்தை அல்லாஹ் யாருக்கும் வழங்கியதில்லை.


மனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்.

ஆனால் இங்கே நாம் வெறுப்பதற்கு பொய்ன்ட்ஸ் தேடிக் கொண்டு இருக்கின்றோம்.

இதே குரோதங்களுடன் பகைகளுடன் நாளை எமக்கு மரணம் வரலாம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.


தனிமனித தாக்குதல்களைத் தவிர்ந்து  நல்ல விடயங்களை எழுதவும் பகிரவும்
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

-Safwan Basheer-

Post a Comment

0 Comments