ஈரான் இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா தலையிட்டால் பண்டோரா பெட்டியை திறப்பது போலாகும் என்றார் ரஷ்ய அதிபர் புடின்.
அதென்ன "பண்டோரா பெட்டி"? அது கிரேக்க தொன்மவியல் புராண கதையில் வரும் ஒரு கதாபாதாதிரத்திற்கு கடவுளால் தரப்பட்ட பெட்டியாகும்.
முதல் மனிதர் ஆதம் ஹவ்வா (ஏவால்) போன்று கிரேக்க தொன்மவியல் கதையில் இருவர் கடவுளால் தண்டிக்கப்பட்டு உலகிற்கு அனுப்பப்படுகின்றனர்.
அதில் பெண் கதாபாத்திரம் தான் பண்டோரா, அவளிடம் கடவுள் ஒரு பெட்டியை தந்து இதனை திறந்து விடாதீர் என்று எச்சரித்து அனுப்புகிறார்..
ஆனால் அவளோ உலகிற்கு வந்தவுடன் ஆர்வ மிகுதியால் அதனை திறந்து விட உலகில் அத்தனை தீமைகளும் பரவியதாகவும் அச்சத்தில் அதனை மூடூவதற்குள் தீமைகள் கெட்டவைகள் அகிலமேங்கும் பரவி விட்டதாகவும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டதாகவும்... ஒரு புராணக் கதை உண்டு...
அந்தக் கதையை மையமாக வைத்து உலகில் ஒரு பிரயோகம் புழக்கத்திற்கு வந்துள்ளது..
ஆத்திர அவசரத்தில் ஒரு சிறிய செயலைச் செய்யத் துணிவதால் கட்டுக்கடங்காத பல பாரிய பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்பதே அதுவாகும்!
அலீ காமெனியின் மறைவிடம் அறிவோம், அவர் சரணடைய வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்த போது தான் புடின் இவ்வாறு கூறினார்..
அதாவது அமெரிக்கா தலையீடு செய்வதோ அவ்வாறு நினைப்பதோ கூடாது, அது பிராந்தியத்தில் போர் பதட்டத்தை விஸ்தரிப்பது மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலும் கட்டுக்குள் கொண்டுவரமுடியாத பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே அந்த எச்சரிக்கையாகும்...
குறிப்பு :
உங்களுக்கு அருகிலும் ஒரு பண்டோரா பெட்டி இருக்கலாம்!
அன்றாட வாழ்வில் பலரும் பல பண்டோரா பெட்டிகளை திறந்து விட்டுக் கொண்டு அவஸ்தை படுவதனையும் நாம் காண்கிறோம் அல்லவா? மிகச் சிறிய பண்டோரா பெட்டி உதாரணம், சிலரது வாயை கிளறி விடுவது போல!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
21.06.2025
0 Comments