சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் பெண்கள் சேவையை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதே அல்ஹனா மாதர் நலன்புரி சங்கம்.
இந் நலன்புரி சங்கத்தினால் காலப்போக்கில் சமூக நலன்களுடன் பற்பல சமூக சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் சுமார் 8 வருடங்களுக்கு முன்னால் புத்தளம் மணல்குன்றில் 250 மாணவ,மாணவிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே அல்-ஹனா குர்ஆன் மத்ரஸா.
இக்குர்ஆன் மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்களின் பூர்த்தியை நினைவு கூறும் முகமாக மாணவ,மாணவிகளுக்கு நிகழ்ச்சி நிரல்களுடன் சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பெற்றோர்களும், இங்கே பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.
-RILA-








0 Comments