Subscribe Us

header ads

தனியார் மருத்­து­வ­ம­னை­களின் வைத்­திய பரி­சோ­த­னைக் கட்­டணம் 2000 ரூபாவாக வரையறுப்பு -ராஜித


தனியார் மருத்­து­வ­ம­னை­களின் சேவைக் கட்­ட­ணங்­க­ளுக்­கான வற்­வரி அதி­க­ரிக்­கப்­படும் அதே­வேளை வைத்­தியப் பரி­சோ­த­னை­க­ளுக்­கான (சனலிங்) கட்­டணம் 2000 ரூபாவாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது.
அதனை மீறி அதிகம் அற­விட்டால் அத்­த­னியார் வைத்­தி­ய­சாலை கறுப்புப் பட்­டி­யலில் சேர்க்­கப்­படும் என்று அமைச்­சரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
நேற்று புதன்­கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­ற வாராந்த அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரி­வித்­த­போதே ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார்.
மேலும் சத்­திர சிகிச்சை நிபு­ணர்கள் நோயாளி ஒரு­வ­ருக்கு சத்­திர சிகிச்சை மேற்­கொண்ட பின்னர் நோயா­ளியின் அருகில் ஒரு மணித்­தி­யாலம் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.
இதே­போன்று நோயா­ளி­க­ளுக்கு நன்­மை­யான விதத்தில் பல சட்­டங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments