இலங்கை தென்கிழக்கு
பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச கண்பரிசோதனை
முகாமொன்று இன்றைய கடந்த 10.03.2016 வியாழக்கிழமை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வளாக சுகாதார
நிலையத்தில் சிறப்பாக நடந்தேறியது.
இந்த நிகழ்வில் மூவின மாணவ சமூகங்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக
முஸ்லிம் மஜ்லிஸின் பலதரப்பட்ட வேலைத்திட்டங்களில் இதுவும் ஒன்றாகக்
காணப்படுகின்றது.
மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது மூவின மாணவ
சமூகத்தின் சகோதர மற்றும் ஐக்கியத்தை மேம்படுத்த இனிமேலும் பல்வேறு
செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்ஷா அல்லாஹ்
தகவல்:- எம்எப் முஹம்மத் பாஹத்





0 Comments