இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்பன பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத காலத்திலிருந்து இது வரையில் வர்த்தக இடைவெளி அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி நிலை வலுவடைந்து செல்வதாகவும் எச்சரித்துள்ளது. இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நிலை தொடர்பில் மத்தியவங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2015 டிசம்பர் வரையிலான அரையாண்டுப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதி 817.5 மில்லியன் அமெரிக்க டொலராக 12.7% ஆக வெளிப்படுத்தியிருந்தது. மேலும்
இறக்குமதி 1644.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 8.5 சதவீத்தினையும் வெளிகாட்டியிருந்ததன் அடிப்படையில் 827.3 மில்
லியன் அதாவது 4.4 சதவீத வர்த்தக இடை வெளியை வெளிக்காட்டியுள்ளது.2015 ஆண்டில் 5.6 சதவீத்தினாலும் 10505 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்தோடு இறக்குமதியில் 2.5 சதவீதம் அல்லது 18935 மில்லியன் அமெரிக்க டொலர் வீழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த பொருளாதார வீழ்ச்சிக்கான விஷேட காரணங்களாக உலக சந்தையின் பொருட்களுக்கான விலையில் ஏற்பட்டுள்ள தலம்பல் நிலைகளும் குறைந்த நிர்ணய விலைகளும் காரணமாக அமைந்துள்ளது.
மேலும் தேயிலை ,இறப்பர்,கடலுணவு பொருட்கள்,ஆடை உற்பத்தி பொருட்களின் வருமானம் கடந்த வருடத்தில் மிகக்குறைவாக காணப்பட்டது. மேலும் உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் குறைந்த மின்வலு உற்பத்தி போன்றன இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
இதனடிப்படையில் இலங்கையின் ஏற்றுமதி சந்தையில் ஐக்கிய அமெரிக்கா பிரித்தானியா இந்தியா ஜேர்மனி மற்றும் இத்தாலி என்பன முன்னிலை வகிப்பதோடு 51 சதவீத மொத்த ஏற்றுமதி வர்த்தகத்திற்கு பங்களிப்புச் செய்கின்றது.
அத்தோடு இந்தியா ,சீனா ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் என்பன பிரதான இறக்குமதி செய்யப்படும் நாடுகளாக உள்ளன. இது மொத்த இறக்குமதியில் 60 சதவீதமான பங்களிப்வை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments