அன்புள்ள தம்பிக்கு,
நான் நலம், நீ என்னை விட நலம், அப்பச்சி எல்லோரையும் விட நலம் என்ற சங்ககாலம் தொட்டு வரும் கடிதத்தின் தொடக்க வார்த்தைகள் எல்லாம் ஜனவாரி 8 உடன் எமது மெதமுலன வீட்டின் கொல்லைப்புறத்தில் ஆழமாய் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டன..
உனது மொபைலை ஜெயிலில் பிடிங்கிக் கொண்டுவிட்டதால் இப்படியொரு கடிதத்தை எழுதி அவசரமாய் நமது விசுவாசி வீரவன்சவிடம் அனுப்பிவைக்கிறேன்.
உன்னை கடற்படையில் இருந்து நீக்கியிருப்பதாகவும் உனது பிணை மணுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதாகவும் வந்த செய்திகளைக் கண்டு அழுகை வந்துவிட்டது தம்பி..என்ன செய்றது..எல்லாம் அந்த யஸாரா ட சாபம்டா...பாவம் அந்தப் பொண்ணு..
"கண்ணசைவுக்குட்பட்ட சேவர்கள்,ஒரு டெலிபோன் கோலில் கோலோச்சிய நாட்கள்,நாம் நினைச்சதை எழுதிய ஊடகங்கள்".எப்படி எல்லாம் வாழ்ந்தோம்டா!
அந்த வஸீம் தாஜூதின் கேஸ்ல என்னையும் புடிச்சி உள்ளே போட இருப்பதாய் ஊடகங்கள் அலறுகின்றன.என்னை கேட்டால் நான் வஸீமைப் பார்த்ததே இல்லை என்பேன்,உன்னைக் கேட்டால் யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடு.
விசேடம் என்று சொல்வதற்கு ஏதும் இல்லை..அம்மா தற்போது மேக்கப் போடுவதே இல்லை, அப்பச்சிக்கு ப்ரஷர் ஜாஸ்தியாகி விட்டது..நீ ஆசையோடு வளர்த்த பசுமாடு குட்டி போட்டுள்ளது.
தம்பி ரோஹித்த வானுக்கு ரொக்கட் அனுப்புவது எல்லாத்தையும் விட்டுட்டான்.பலாமரம் காய்ச்சுள்ளது.இவ்வளவுதான்பா.
அப்பச்சியோடு அலரிமாளிகையில் வாழ்ந்த 11 வருடங்களை நினைத்துக் கொண்டு இரு..ரிலாக்ஸாய் இருக்கும்
இப்படிக்கு,
பரிதாபமாகி போன அண்ணன்,
நாமல் ராஜபக்ச
-Zafar Ahamed
0 Comments