பெரியநீலாவணை அக்பர் மையவாடியினை துப்புரவு செய்யும் பாரிய சிரமதானப்பணி சனிக்கிழமை காலை 6.00 முதல் 9.00 மணி வரை நடைபெற்றது.
மேற்படி சிரமதான நிகழ்வானது பெரியநீலாவணை மஸ்ஜிதுல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலின் பொது வேண்டுகோளின் பெயரில் பிரதேச மக்கள் மட்டுமல்லாது மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பகுதிகளைச் சேர்ந்த ஏனைய பொதுமக்களின் பங்குபற்றலுடனும் நடைபெற்றது.
இப் பணியில் சமூக அந்தஸ்து பேதம் மறந்து அனைத்து தரப்பு மக்களும் பங்குபற்றி சிறப்பாக அனைத்து வேலைகளையும் பூரணப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
காமிஸ் கலீஸ்














0 Comments