திருமண நிகழ்வொன்றில் பரிமாறப்பட்ட உணவில் எலியொன்று காணப்பட்ட சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் 'சொங்கிவ்ங்' நகரில் இடம்பெற்ற திருமண நிகழ்விலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு பரிமாறப்பட்ட மாட்டிறைச்சிக் கறியிலேயே எலி காணப்பட்டுள்ளது.
இதனைக் கண்ட விருந்தினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளனர். இவ்வுணவை தயாரித்த ஹோட்டல் ஊழியர்கள் மன்னிப்புக் கோரியுள்ளதுடன் , சமைத்து வைத்த தன் பின்னர் எலி கறியை உண்ண வந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவத்தின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.





0 Comments