Subscribe Us

header ads

கட்­டட தொழி­லா­ளியுடனான காதலால் வந்த வினை: ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட சிறுமி

16 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய இளை­ஞனொருவன் எதிர்­வரும் 11 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்டுள்ளார்.
அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­மன்றம் இவ் உத்­த­ர­வை பிறப்பித்துள்ளது.
அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட அட்­டா­ளைச்­சேனை பால­முனை பிர­தே­சத்தில் உள்ள வீடொன்றில் கட்­டட நிர்­மாண வேலைகள் நடைபெற்றுக் கொண்­டி­ருக்கும் வேளை அங்கு கட்­டட தொழி­லா­ளியாக வேலை செய்த 22 வயது இளைஞன் ஒருவனே இக்குற்றத்தை புரிந்துள்ளார்.
அவர் வீட்­டிலிருந்த16 வயது சிறுமியை கடத்திச் சென்றே குற்றத்தை புரிந்துள்ளார். கடத்திச் சென்­றுள்ளார்.
இச்­சம்­பவம் தொடர்­பாக சிறு­மியின் உற­வி­னர்கள் அன்­றைய தினமே அக்­க­ரைப்­பற்று பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.
குறித்த  இளைஞன் தாய், தந்­தையின் பொறுப்பில் இருந்த சிறு­மியை ஆசை வார்த்­தை­களை கூறி திருக்­கோவில், செங்­க­லடி போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக பொலி­ஸாரின் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணையில் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments