சிலாபம் களப்பு பிரதேசத்தில் தீவொன்றில் சட்டவிரோதமாக முன்னெடுத்துச் செல்லப்பட்ட பாரிய மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வலான காவல்துறை மோசடி தவிர்ப்பு பிரிவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சட்டவிரோத மதுபான உற்பத்திற்காக பயன்படுத்தப்படும் கோடா 28 ஆயிரம் லீட்டரும், உற்பத்தி நிறைவு பெற்ற 75 ஆயிரம் லீட்டர் மதுபானம் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக குறித்த தீவில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமைக்கான சாட்சிகள் கிடைத்துள்ளது என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments