மெல்லிய தோலால் ஆன இமைகள், நிமிடத்திற்கு 15 முதல் 20 முறைகள் இமைக்கின்றன. ஒரு மணி நேரத்தில் 1,200 முறையும் நாள் ஒன்றுக்கு 28 ஆயிரம் முறையும் இமைக்கின்றன.
ஒரு முறை கண் இமைக்க புள்ளி 3 வினாடிகள் ஆகின்றன. இப்படி இடைவிடாது இமைகள் இமைப்பது கண்களை பாதுகாக்கத்தான்.
கண் இமையோரம் இருக்கும் சுரப்பிகள் அவை மூடும் போது சுரக்கின்றன. இந்த நீர் கண்களுக்கு நன்மை பயக்கிறது. அதாவது விழிகள் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.
தூசுகள், அதிக வெளிச்சம் ஆகியவற்றில் இருந்தும் கண்களை பாதுகாக்க கண் இமைகள் இமைக்கின்றன. மழை பெய்யும்போதோ, தூசுகள் வீசும்போது இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன.
மழைநீர், வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கண் இமைக்கும் அந்த கண நேரத்தில் மனதிற்கு ஓய்வு கிடைப்பதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.


0 Comments