Subscribe Us

ஞானசார எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்


இன்று காலை கைது செய்யபட்டு போலிஸ் காவலில் இருந்து, ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் படுததப் பட்ட  ஞானசார தேரரை எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னளியகொடவின் மனைவிக்கு நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியது, ஏசியது ஆகிய  குற்றச்சாட்டுகளில்  ஹோமாகம நீதிமன்றால் நேற்று பிடியாணை உத்தரவு பிடிக்கபட்டு இன்று காலை 10.00 மணியளவில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments