அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் பல சாதனை வீரர்களையும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரையும் தன்னகதே வைத்துள்ள பெருமை இந்த சோபர் கழகத்துக்குள்ளது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கழகத்தின் தலைவரும் தொழிலதிபருமான யூ.கே.ஆதம்லெப்பை தலைமையில் கழக வீரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நேற்று இரவு (13) மீலாத்நகர் அல் ஜெஸீறா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற பிரதேச விளையாட்டுப்போட்டிகளில் கடந்த 10 வருடங்களாக தொடர்ச்சியாக சம்பியம் பட்டத்தையும் சுவிகரித்துள்ளது. இந்தப் பெருமை கிழக்கு மாகாணத்திலுள்ள எந்த கழகங்களுக்குமில்லை என்றுதான் கூறலாம். அந்தளவுக்கு மிகத்திறமை வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களைக்கொண்டு இக்கழக வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டும் வருகின்றன.
இக்கழகத்திலுள்ள வீரர்கள் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட, தேசிய மட்ட ரீதியில் பல சாதனைகளை படைத்து இக்கழகத்துக்கும் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கும் தேசிய ரீதியில் நற்பெயரினை பெற்றுக்கொடுத்துள்ளனர். இப்பெருமையில் எனக்கும் பாரியபங்குண்டு. இக்கழகத்தின் வளர்ச்சிக்காக எனது இவ்வருட நிதியிலிருந்து 60 ஆயிரத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளேன்.
சோபர் விளையாட்டுக் கழகம் விளையாட்டில் மாத்திரமல்லாமல் சமூக சேவைகளிலும், அரசியலிலும், மக்களுக்காக குரல் கொடுப்பதிலும், தவறுகளை தட்டிக்கேட்கும் ஒரு சிறந்த கழகமாகவுள்ளதால் இக்கழகத்தின் செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிலர் மக்கள் மத்தியில் ஒரு அடாவடிக் கழகமாகமாக பேசவைத்து வருகின்றனர் இதை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூன், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
0 Comments