Subscribe Us

header ads

கத்தாரில் பூத்த PAQ – VTF புலமை மலர் PCTT யில் மனம் வீசியது


கத்தாரில் வாழும் புத்தளம் சகோதரர்களின் அமைப்பு PAQ (Puttalam Association Qatar) கீழ் இயங்கும் VTF (Vocational Training Fund) வழங்கும் தொழிநுட்பக் கற்கைகளுக்கான புலமை நிதியம் Puttalam Centre for Technical Training புத்தளம் தொழிநுட்பப் பயிற்சி நிலையத்தில் பயிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 13 மாணவர்களுக்கு இன்று (13) பயிற்சி நிலைய கேட்போர்க் கூடத்தில் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் புத்தளம் பெரியபள்ளி நிருவாக தலைவர் பி.எம்.ஏ. ஜனாப், PAQ அமைப்பின்VTF பொறுப்பாளர் ஏ.எம். மஜாஸ், PHD சார்பில் பொறியியலாளர் எம்.எம். இக்ஸாப், ஏ.எஸ்.எம். நமாஸ், எம். பர்ஹான்எம். ஹிஸ்மி, PAQ புத்தளம் வட்டம் சார்பாக எஸ்.ஆர்.எம். முஸம்மில், சட்டத்தரணி பஸ்லுர் ரஹ்மான், எம். இர்ஷாத், எம்.எச்.எம். ரஸ்மி ஆகியோருடன் மாணவர்களும் பெற்றாரும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர்.

பெக்கின் பணிகள்; இப் புலமை நிதியம் குறித்து சட்டத்தரணி ரஹ்மான் உரையாற்றும்போது: ‘இது ஓர் அமானிதம். நீங்கள் பெறும் நிதியம் உங்கள் மாமா, காக்கா போன்றவர்களினால் நீங்கள் படிக்க வேண்டும் நல்ல சம்பளத்தில் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக அனுப்பியுள்ளார்கள். இப்படி பணத்தை அனுப்புவோர் பெரிய பெரிய சம்பளத்துக்கு தொழில் செய்வோர் அல்ல. மிக சாதாரண சம்பளம் பெறும் சாதாரண ஊழியர்கள். எனவே, இந்த நிதியத்தை நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் கற்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

பொறியிலாளர் இக்ஸாப் உரையாற்றும்போது, ‘நீங்கள் இன்னுமொரு டெக்னீஷியனாக; பிரிஜ் ரிபயார் செய்பவராக வந்து, ஏதோ நல்ல சம்பளம் பெற்றால்போதும் என்று நினைக்கக் கூடாது. நீங்கள் பிரிஜ்களை இறக்குமதி செய்யும் வர்த்தகத்தில் தலை சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். உங்கள் எதிர்காலக் கனவுகளை பெரிய அளவில் அமைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஆலோசனை வழங்கினார்.

PCTT பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.எம்.எம். ரிபாய் பயிற்சி நிலையத்தின் பணிகள் குறித்து உரையாற்றினார். ஏ.எம். மஜாஸ் கத்தாரில் வாழும் புத்தளம் சகோதரர்கள் இவ்வாறான நிதியங்களுக்காக எந்த அளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை விளக்கப்படுத்தினார்.

தெரிவுசெய்யப்பட்ட 13 மாணவர்களுக்கு புலமை நிதியம் வழங்கப்பட்டது. அவர்களின் குடும்ப பொருளாதார நிலைமை மட்டுமன்றி, அம் மாணவர்கள் பயிற்சிக்கு வருகை, பாடங்களை நிறைவுசெய்தல், ஒழுக்கம் ஆகியனவும் இப் புலமையைப் பெறுவதற்கான தகைமைகளாகக் கணிக்கப்பட்டது.

நிகழ்ச்சித் தொகுப்பினை ஆசிரியர் ஏ.ஓ.எம். நிஜாம் நிகழ்த்தினார்.

தொகுப்பும் படங்களும்: Hisham Hussain, Puttalam










Post a Comment

0 Comments