Subscribe Us

header ads

மீன் தொட்டியில் கைகளையிட்ட சிறுவனுக்கு நேர்ந்த நிலை

மீன் தொட்டியில் கைகளையிட்ட குற்றத்திற்காக 8 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு, சூடு வைத்த அத்தை தொடர்பான தகவல் ஒன்று ஹொரனை, ஹங்குறுவாந்தொட்ட பிரதேசத்தில் இருந்து தெரியவந்துள்ளது.


நேற்று முன் தினம் குறித்த சிறுவன் அத்தை வீட்டுக்கு சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.



மீன் தொட்டியில் சிறுவன் கைகளை இட்டதன் காரணமாக கோபம் அடைந்த குறித்த பெண், மேசை கரண்டி ஒன்றை சூடாக்கி சிறுவனின் கையில் சூடு வைத்தாக தெரியவந்துள்ளது.



சூடு வைக்கப்பட்ட சிறுவன் ஹொரனை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.



இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் ஹொரனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவரை எதிர் வரும் ஜனவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Post a Comment

0 Comments