1065 : லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம் திறந்துவைக்கப்பட்டது.
1612 : இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.
1836 : தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.
1836 : மெக்ஸிகோவின் சுதந்திரத்தை ஸ்பெயின் அங்கீகரித்தது.
1879 : ஸ்கொட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் ரயில் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1885 : இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.
1895 : பிரான்ஸின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி பார்ப்பதற்கு திரையிட்டனர்.
1908 : இத்தாலியின் சிசிலி தீவில் பூகம்பம் ஏற்பட்டதில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.
1929 : நியூஸிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
1930 : மகாத்மா காந்தி, பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
1958 : கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
1972 : வடகொரிய பிரதமர் கிம் இல் சுங் அந்நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
1981 : அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வேர்ஜீனியாவில் பிறந்தது.
1989 : அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் ஏற்பட்ட 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டனர்.
1994 : விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
2005 : இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவரை யுக்ரேனுக்கு நாடு கடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2006 : எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசத் துருப்புகள் சோமாலியா தலைநகர் மொகடிசுவை கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீளக் கைப்பற்றின.
2007 : நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
2009 : பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர்.
2014 : இந்தோனேஷியாவின் எயார் ஏசியா பிளைட் 8501 விமானம் ஜாவா கடலில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 162 பேரும் உயிரிழந்தனர்.
0 Comments