Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று..... டிசம்பர் - 28

1065 :  லண்­டனில் வெஸ்ட்­மின்ஸ்டர் தேவா­லயம்  திறந்­து­வைக்­கப்­பட்­டது.

1612 : இத்­தா­லிய விஞ்­ஞா­னி­யான கலி­லியோ கலிலி நெப்­டியூன் கோளைக் கண்­டு­பி­டித்தார்.

1836 : தெற்கு அவுஸ்­தி­ரே­லியா, அடிலெய்ட் ஆகி­யன அமைக்­கப்­பட்­டன.

1836 : மெக்­ஸி­கோவின் சுதந்­தி­ரத்தை ஸ்பெயின் அங்­கீ­க­ரித்­தது.

1879 : ஸ்கொட்­லாந்தில் டண்டீ என்ற இடத்தில் ரயில் மேம்­பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்­ததில் அதில் சென்­று­கொண்­டி­ருந்த தொட­ருந்து விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 75 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1885 : இந்­தி­யாவின் வழக்­க­றி­ஞர்கள், அறி­வி­ய­லா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் 72 பேர் இந்­திய தேசிய காங்­கிரஸ் கட்­சியை ஆரம்­பிப்­ப­தற்கு பம்­பாயில் கூடினர்.

1895 : பிரான்ஸின் லூமி­யேர சகோ­த­ரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்­ப­டங்­களை முதன்­மு­த­லாகப் பொது­மக்கள்  கட்­டணம் செலுத்தி பார்ப்­ப­தற்கு திரை­யிட்­டனர்.

1908 : இத்­தா­லியின் சிசிலி தீவில் பூகம்பம் ஏற்­பட்­டதில் 75,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1929 : நியூ­ஸி­லாந்தின் கால­னித்­துவ காவற்­து­றை­யினர் ஆயு­த­மின்றிப் போராட்­டத்தில் ஈடு­பட்ட சமோ­வாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்­றனர். இது சமோ­வாவின் விடு­தலை இயக்­கத்­துக்கு தூண்­டு­த­லாக அமைந்­தது.

1930 : மகாத்மா காந்தி, பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­காக பிரித்­தா­னியா சென்றார்.

1958 : கியூ­பாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.

1972 : வட­கொ­ரிய பிர­தமர் கிம் இல் சுங் அந்­நாட்டின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார்.

1981 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது சோத­னைக்­குழாய் குழந்தை எலி­சபெத் கார் வேர்­ஜீ­னி­யாவில் பிறந்­தது.

1989 : அவுஸ்­தி­ரே­லியா, நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்தில் நியூ­காசில் நகரில் ஏற்பட்ட 5.6 அளவை நில­ந­டுக்கம் கார­ண­மாக 13 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1994 : விடு­தலைப் புலி­களின் உப தலை­வர்­களில் ஒரு­வ­ரான கோபா­ல­சாமி மகேந்­தி­ர­ராஜா இந்­திய அமை­திப்­ப­டை­யுடன் இணைந்து புலி­க­ளுக்­கெ­தி­ராக சதி செய்தார் என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் அவ­ருக்கு புலி­களால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

2005 : இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்­றங்­க­ளுக்­காக ஜோன் டெம்­ஜான்ஜுக் என்­பவரை யுக்­ரே­னுக்கு நாடு கடத்த ஐக்­கிய அமெ­ரிக்­காவின் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

2006 : எதி­யோப்­பிய மற்றும் சோமா­லிய அரசத் துருப்­பு­க­ள் சோமா­லியா தலை­நகர் மொக­டி­சுவை கிளர்ச்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீளக் கைப்­பற்­றின.

2007 : நேபா­ளத்தின் இடைக்­கால நாடா­ளு­மன்றம் நாட்டை குடி­ய­ர­சாக அறி­வித்து மன்­ன­ராட்­சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

2009 : பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர்.

2014 : இந்தோனேஷியாவின் எயார் ஏசியா பிளைட் 8501 விமானம் ஜாவா கடலில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 162 பேரும் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments