| எருமை மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து, பா.ஜ.க நன்கொடை பெற்ற விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது. |
| இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013-14, 2014-15ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி இந்த நன்கொடையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு பொது தேர்தலின் போது, பிரிகிரோபிகோ அல்லானா, பிரிகிரோபிகோ கன்வென்ரா அல்லானா, இன்டக்ரோ புட்ஸ் நிறுவனங்களிடம் இருந்து 2 கோடி ரூபாயை நன்கொடையாக பா.ஜ.க. பெற்றுள்ளது. 2015-ம் ஆண்டு பிரிகிரோபிகோ அல்லானா நிறுவனம் தனியாக பா.ஜ.கவுக்கு 50 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த 3 நிறுவனங்களும் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அல்லானா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து எருமை மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. |


0 Comments