இலங்கையைச் சேர்ந்த பெண்ணைக் கல் எறிந்து கொல்லுமாறு சவூதி அரேபிய நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆட்சேபித்து கொழும்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்பாக நேற்றும் இன்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்பாட்டில் ஒரு இலட்சம் கையெழுத்துகளைப் பெறும் வேட்டை இடம் பெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற கையெழுத்து வேட்டையின்போது, மனித உரிமை ஆர்வலர்கள் சார்பாக அருட் சகோதரர் சக்தி வேல் கருத்து தெரிவிக்கையில் “ கல் எறிந்து கொல்லப்படவுள்ள தாயை மீட்டெடுக்க தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் சிறைக் கூடங்களிலும் வீட்டுக் காவலிலும் வைத்தியசாலைகளிலும் உள்ள அனைவரையும் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை நிமித்தம் செல்வோருக்கு முன்பு அந்த நாடு பற்றிய உண்மையான நிலைமைகளையும் சட்டத்தையும் பற்றியும் ஒரு தெளிவான அறிவை வழங்குவது அவசியம் எனவும் அவர் கூறினார்.
(அஷ்ரப் ஏ சமத்)

0 Comments