Subscribe Us

header ads

ஆசி­ரிய பயிற்சிக் கல்லூரிக்கு விண்­ணப்பம் கோரப்பட்டுள்ளது

நாட­ளா­விய ரீதியில் ஆசி­ரியர் பயிற்சிக் கல்­லூ­ரி­களில் இரு­வ­ருட ஆசி­ரிய பயிற்சி நெறியை மேற்­கொள்­­வ­தற்கு கல்­வி­ய­மைச்சு தகு­தி­யா­ன­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்பம் கோரி­யுள்­ளது. இது தொடர்­பான வாத்­த­மானி அறி­வித்தல் வெளியா­கி­யுள்­ளது.
அர­சாங்க சேவை ஆணைக்­குழு அல்­லது கல்விச் சேவைகள் ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் அல்­லது மாகாண அரச சேவைகள் ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் கையொப்­பத்­துடன் முறை­யான நிய­ம­னத்தைப் பெற்று அர­சாங்கப் பாட­சா­லை­களில் கட­மை­யாற்றும் பயிற்­றப்­ப­டாத ஆசி­ரி­யர்கள், கல்­வி­ய­மைச்சின் தனியார் பாட­சா­லை­களின் பணிப்­பா­ளரால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட தனியார் பாட­சா­லை­களின் பெயர்ப்­பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள மற்றும் மாகாணக் கல்­விப்­ப­ணிப்­பாளர் அனு­ம­தி­ய­ளித்­துள்ள நிய­ம­னங்­களைக் கொண்­டுள்ள ஆசி­ரி­யர்கள், மக­ர­கம தேசிய கல்வி நிறு­வ­கத்­தினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட தொலைக்­கல்வி அல்­லது பிரின்செட் அல்­லது பட்­ட­தா­ரி­யல்­லாத பயிற்­றப்­ப­டாத ஆசி­ரி­யர்­களைப் பயிற்­று­விக்கும் வார இறுதி பாட­நெ­றியில் ஆசி­ரியர் பயிற்­சியை மேற்­கொண்டு சித்­தி­பெ­ற­வில்­லை­யென தொலைக்­கல்வி ஆசி­ரியர் பயிற்சி அதி­கா­ரி­களால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆசி­ரி­யர்கள், கல்­வி­ய­மைச்சின் பிரி­வெனா கல்விப் பிரிவில் பதிவு செய்­யப்­பட்­டடு மாகாணக் கல்விப் பணிப்­பா­ளரால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிய­ம­னங்­களைக் கொண்ட பிரி­வெனா ஆசி­ரி­யர்கள் ஆகியோர் இதற்கு விண்­ணப்­பிக்க முடியும். ஆசி­ரியர் கல்­லூ­ரி­களில் காணப்­படும் வெற்­றி­டத்­திற்­கேற்ப, பாட­சா­லை­களில் ஆசி­ரி­யர்கள் கட­மை­யேற்­றதன் முன்­னு­ரி­மையின் அடிப்­ப­டையில் தொிவு மேற்­கொள்­ளப்­படும்.
ஆரம்பக் கல்வி, கணிதம், விஞ்­ஞானம், சமூ­க­வியல், விவ­­சாயம், மனை­யியல், சங்­கீதம், சித்­திரம், அரபு, இஸ்லாம், இந்து சமயம், கிறி­ஸ­தவம், நடனம், விசே­ட­கல்வி, தமிழ், வணிகம், உடற்­கல்வி உள்­ளிட்ட 22 பாடநெ­றி­க­ளுக்கு ஆசி­ரி­யர்கள் விண்­ணப்­பிக்க முடியும். ஏதா­வ­தொரு பாட­நெ­றி­யொன்­றுக்கு, போது­மா­ன­ளவு விண்­ணப்­ப­தா­ரிகள் இல்­லா­தி­ருப்பின் அப்­பா­ட­நெ­றியை நடத்­து­வது, அல்­லது நடத்­தா­தி­ருப்­பது குறித்து கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் தீர்­மா­னிப்பார்.
அட்­டா­ளைச்­சேனை, மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட நாட்­டி­லுள்ள 07 ஆசி­ரியர் கல்­லூ­ரி­க­ளுக்கு விண்­ணப்­பிக்க முடியும். அர­சாங்கப் பாட­சா­லை­களில் சேவை­யாற்றும் ஆசி­ரி­யர்கள் 2015.11.27ஆம் திகதி குறைந்­தது மூன்று மாத­கால சேவையை பூர்த்தி செய்­த­வ­ராக இருத்தல் வேண்டும். விண்­ணப்­ப­தா­ரிகள் தமது நிய­ம­னத்தின் தன்­மையை முதல் நிய­மனக் கடி­தத்தின் மூலம் உறு­திப்­ப­டுத்த வேண்டும்.
முறை­யாகப் பூர்த்தி செய்­யப்­பட்ட விண்­ணப்­பத்­தினை, பணிப்­பாளர், ஆசி­ரியர் கல்வி நிர்வாகப் பிரிவு, கல்வி அமைச்சு, இசுருபாய என்ற முகவரிக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை தாங்கிவரும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியைப் பின்பற்றுவதற்காக ஆசிரியர்களைத் தெரிவு செய்தல் எனக் குறிப்பிடுதல் வேண்டும்.

Post a Comment

0 Comments