Subscribe Us

header ads

பாண் விலை அதிகரிக்கும்…?

2016ஆம் ஆண்டுக்கான தேசிய அரசின் வரவு – செல­வுத்­ திட்­டத்தில் பேக்­கரி தயாரிப்புக்களுக்கான வரி அற­வீடு அதி­க­ரித்­துள்­ளது. அத்­துடன் வரவு – செல­வுத்­ திட்­டத்தில் எதிர்­பார்க்கப்­பட்ட நிவா­ரணம் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் தொழிற்­து­றையை பாது­காக்கும் முக­மாக எதிர்­கா­லத்தில் பாண் உள்­ளிட்ட பேக்­கரி தயா­ரிப்­புக்­களின் விலை அதி­க­ரிக்கும் சாத்­தி­ய­முள்­ளது என அகில இலங்கை பேக்­கரி உரி­மை­யா­ளர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளன பேக்­கரி உரி­மை­யா­ளர்கள் சங்­கத்தின் தலைவர் என்.கே.ஜய­வர்த்­தன, இம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்தின் மூலம் பேக்­கரி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலை கார­ண­மாக தேசத்தை கட்­டி­யெ­ழுப்பும் வரி­யா­னது பாண் இறாத்­த­லொன்­றுக்கு 4 சத­வீ­தமும் ஏனைய பேக்­கரி தயா­ரிப்­புக்­க­ளுக்கு 16 சத­வீ­தமும் வரி செலுத்த வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.
எனவே இவற்றை கருத்திற் கொண்டு தேசத்தை கட்­டி­யெ­ழுப்பும் வரி­யினை குறைக்க அர­சாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விலை அதிகரிப்பை தவிர வேறு வழியில்லை எனவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments