பலஸ்தீன ஊடகவியலாளரான யுவதியொருவர் நேரடி செய்தி ஒளிபரப்பொன்றில் பங்குபற்றியபோது அவரை கிண்டல் செய்து, இடையூறு விளைவித்த இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள் மூவர் தண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
சாரா அல் அஸ்ரா எனும் இந்த ஊடகவியலாளர் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் அபுத் எனும் கிராமத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட நேரடி செய்தி ஒளிபரப்பில் தகவல்களை தெரிவித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் மூவர் சாரா அல் அஸ்ராவை குழப்பும் விதமாக கிண்டல் செய்ததுடன் அவருக்கு முன்னாலிருந்த வீடியோ கெமராவையும் மறைத்தனர்.அவர் பொய் கூறுகிறார் எனவும் தெரிவித்தனர்.
இந்தச் சேட்டைகளில் கவனம் செலுத்தாத சாரா அல் அஸ்ரா, தனது பணியை செய்து முடித்தார்.
இக்காட்சிகள் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பானவுடன் பலர் சாரா அல் அஸ்ராவை பாராட்டிய துடன் இஸ்ரேலிய படையினருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேற்படி சிப்பாய்களுக்கு 14 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித் துள்ளனர்.

0 Comments