Subscribe Us

header ads

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட இளைஞர் முதலையினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

அமெ­ரிக்­காவில் திருட்டுக் குற்­றத்­துக்­காக தேடப்­பட்ட இளைஞர் ஒருவர் பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிச்­செல்ல முற்­பட்­ட­போது முத­லை­யொன்­றினால் கொல்­லப்­பட்­டுள்ளார். 


மாநி­லத்தைச் சேர்ந்த 22 வய­தான மெத்­தியூ ரிக்கின்ஸ் எனும் இந்த இளைஞர் திருட்டுக் குற்­றத்­துக்­காக பொலி­ஸா­ரினால் தேடப்­பட்­டு வந்­தவர். 

மற்­றொரு சந்­தேக நப­ருடன் இணைந்து திருட்டு நட­வ­டிக்­கை­யொன்றில் ஈடு­படு­வதற்காக பார்பூட் பே எனும் நக­ருக்குச் செல்­வ­தாக தனது காத­லி­யிடம் கூறி­விட்டு சென்­றி­ருந்தார்.

கடந்த 13 ஆம் திகதி முதல் அவரை காண­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது. 

அவரை பொலிஸார்  தொடர்ச்­சி­யாக தேடி வந்த நிலையில் 10 நாட்­களின் பின் அவரின் சடலம் ஏரி­யி­லி­ருந்து சுழி­யோ­டி­களால்  கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.  ஒரு கையும் காலும் அச்­ச­ட­லத்தில் இருக்­க­வில்லை.

இது தொடர்­பாக விசா­ர­ணை­களை அடுத்து. அந்த இளைஞர் 11 அடி நீள­மான முத­லை­யினால் தாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக நேற்­று­முன்­தினம் செய்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.


பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்­காக ஏரி­யொன்றில் குதித்­த­போது அவர் மேற்­படி முத­லை­யினால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக கருதப்படுவதாக புளோரிடா மாநில பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments