Subscribe Us

header ads

பாதி உடலுடன் சந்தையில் கிடந்த மீனை 6 மாதங்கள் உயிர்வாழ வைத்த நபர் (படங்கள்)

தாய்­லாந்தைச் சேர்ந்த ஒருவர் இரண்­டாக துண்­டிக்­கப்­பட்ட மீன் ஒன்றை 6 மாத காலம் வளர்த்­துள்ளார்.

 

சீமெந்து பூசப்­பட்ட கரையைக் கொண்ட தடா­க­மொன்­றி­லி­ருந்து வெளியே தாவ முயன்­ற­போது மேற்­படி மீனின் உடல் துண்­டிக்­கப்­பட்­டது.

இம்­மீனை தாய்­லாந்­தி­லுள்ள சந்­தை­யொன்றில் கண்ட வட்­சரா சோட் என்­பவர் அம்மீன் உயி­ருடன் இருப்­பதை உணர்ந்து அதை வளர்ப்­ப­தற்குத் தீர்­மா­னித்தார்.  


இம்­மீ­னுக்கு ஐ ஹாவ் (I-Half) என தான் பெய­ரிட்டதாக 36 வய­தான வட்­சாரா தெரி­வித்­துள்ளார். இம்மீன் அண்­மையில் உயி­ரி­ழந்­து­விட்­டது.

எனினும் 6 மாத­காலம் பாதி உட­லுடன் அது உயிர்­வாழ்ந்­த­தாக வட்­சரா சோட் தெரி­வித்­துள்ளார்.


இம்மீன் உயி­ரு­ட­னி­ருந்­த­போது பல கிரா­மங்­க­ளுக்கும் அது கொண்டுசெல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments