தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டாக துண்டிக்கப்பட்ட மீன் ஒன்றை 6 மாத காலம் வளர்த்துள்ளார்.
சீமெந்து பூசப்பட்ட கரையைக் கொண்ட தடாகமொன்றிலிருந்து வெளியே தாவ முயன்றபோது மேற்படி மீனின் உடல் துண்டிக்கப்பட்டது.
இம்மீனை தாய்லாந்திலுள்ள சந்தையொன்றில் கண்ட வட்சரா சோட் என்பவர் அம்மீன் உயிருடன் இருப்பதை உணர்ந்து அதை வளர்ப்பதற்குத் தீர்மானித்தார்.
இம்மீனுக்கு ஐ ஹாவ் (I-Half) என தான் பெயரிட்டதாக 36 வயதான வட்சாரா தெரிவித்துள்ளார். இம்மீன் அண்மையில் உயிரிழந்துவிட்டது.
எனினும் 6 மாதகாலம் பாதி உடலுடன் அது உயிர்வாழ்ந்ததாக வட்சரா சோட் தெரிவித்துள்ளார்.
இம்மீன் உயிருடனிருந்தபோது பல கிராமங்களுக்கும் அது கொண்டுசெல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments