Subscribe Us

இலங்கையர் 33 பேர் இன்று காலை நாடு திரும்பினர்

சவுதி அரேபியாவிற்கு பணிக்காக சென்று பல சிரமங்களுக்கு உள்ளான இலங்கையர் 33 பேர் நேற்று காலை நாடு திரும்பினர்.


இவ்வாறு நாடு திரும்பியவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டிய மற்றும் ஒழுவில் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

கொள்ளுபிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்று தமக்கு சிறந்த வேலை பெற்று தருவதாக தெரிவித்து ஒருவரிடம் 100,000க்கும் அதிகமான பணம் பெற்று இவ்வாறு அனுப்பியதாக இவர்கள் தெரிவித்தனர்.

எனினும் அவ்வறான சிறந்த வேலை எதுவும் கிடைக்கவில்லை என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments