சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இருந்தும் அங்கு இன்னும் உள்நாட்டு போர் முடிவுக்கு வரவில்லை. ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. இங்கு அவர்கள் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்துள்ளனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கமுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைநகர் டமஸ்கஸின் கிழக்கு பகுதியில் உள்ள பள்ளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அரசு சார்பு படைகளால் வான்வெளித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரியாவின் மனித உரிமைக்கான கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. டோமா, சக்பா உள்ளிட்ட நகரங்களில் இந்த வான்வெளித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த தாக்குதலை நடத்தியது சிரிய அரசுப் படையா அல்லது ரஷ்ய படைகளா என்பது உறுதியாக தெரியவில்லை என்று அந்த மையம் கூறியுள்ளது.
கடந்த மாதம் அரசு தரப்பு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்யப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடந்து நடைபெற்று வருகின்றது.
முன்னதாக, சிரியாவின் முக்கிய நகரமான ஹோம்ஸ்சில் ஆஸ்பத்திரி அருகே நேற்று தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments