
இது ஒரு அடிமட்டமான, மிக கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாடாகும்.
எவனோ ஒருவன் கனவு காண்கிறான் என்பதற்காக ஒரு பெண்ணின் மானத்தை பறிக்க முடியுமா?
அல்லது அவன் இப்படியான கனவுகள் காணவே கூடாது, கருத்து சொல்லவும் கூடாது என்பதற்காக அவனை தூங்க விடாமல் தடுக்க முடியுமா?
பொதுவான, பயனுள்ள பல விடயங்களை, தகவல்களை,
அவசர செய்திகளை நாம் பல தரப்பட்டவர்களிடமிருந்தும் பெற வேண்டியிருக்கிறது.
எனவேதான் சாதி மத பேதமில்லாமல் பலரையும் லைக் செய்கிறோம்.
யாருடைய பேஸ்புக்கில் யார் இருக்கிறார் என்பதை வைத்து பெண்களின் ஹபாயாவை களட்ட சொல்ல முடியுமா?
பேஸ்புக்கில் இருக்கும் அனைவருமே உம்முஹாத்துல் முஹ்மின்களோ, அவ்லியாக்களோ கிடையாது.
அது ஒரு பொது தளம். அது ஒன்றும் உலமாக்களால் வழிநடத்தப்படுவதில்லை.
பேஸ்புக்கை வைத்து ஒருவர் நல்லவர், கெட்டவர் என்றோ முஸ்லிம், காபிர் என்றோ தீர்மானிக்க முடியுமா?
இப்படி திர்ப்பு சொல்லும் உரிமயோ, தகுதியோ நமக்கு இருக்கிறதா?
யாரை லைக் பண்ணுவது, யாரோடு ப்ரண்ட்சிப் வைப்பதென்பது அவரவர் தனிப்பட்ட விடயம்.
எவனோ ஒரு கேணயன் மார்க்க உணர்ச்சியோடு ஒன்றை அனுப்பி விட்டான் என்பதற்காக அதை மார்க்கமாக எடுத்து விடாதீர்கள்.
இவை நமது மார்க்கத்தின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் கண்மூடித்தனமான சிந்தனைகளாகும்.
குழிக்க சென்று சேறு பூசிய கதையை விடவும் இது "வீட்டினுள்ளே புகுந்த திருடனை பிடிக்க குடும்பத்தோடு சேர்த்து வீட்டுக்கு தீ வைத்த கேணயனின் கதை போல் இருக்கிறது."
சவுதியில் இருந்து மற்றவர்களின் ஹபாயாவை களட்ட முயற்சிக்காமல் முதலில் தனது மனைவி, பிள்ளைகளின் நிலமை என்ன என்பதை இந்த கேணயன் "றியாஸ்" பார்த்து திருத்தட்டும்.
இதுபோன்ற "கேணயன்கள்" அனுப்புகின்ற செய்திகளை கண்ணை மூடிக்கொண்டு மற்றவர்களுக்கு பகிர முன்னர் இது நமக்கு, நமது சமூகத்திற்கு,நமது மார்க்கத்திற்கு
இழுக்கை ஏற்படுத்துமா என்பதை ஆராய்ந்து கொள்ளுங்கள்.
ஒருவரது மானத்தோடு விழையாடுவது லேசுபட்ட காரியமல்ல, பெரும்பாவமாகும்
-அல்மஷூறா நியூஸ்
0 Comments