மாத்தறை – வெவஹமன்துவ பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒருவர் தமது காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
வெவஹமன்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞனே காதலியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள பெண்ணின் படங்கள் சில வெளியாகியுள்ளன. காதல் விவகாரமே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணமென தெரியவந்துள்ளது.
பெண்ணின் வீட்டினுள் நுழைந்த நபர் தன்வசமிருந்த துப்பாக்கியால் பெண்ணை சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments