Subscribe Us

header ads

தனக்கு தானே தீ மூட்டி வீதியில் சென்ற நபர்

பாகிஸ்தானின் நபரொருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு நடு வீதியில் ஓடிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரி விதிப்­பு­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்தே அவர் நப­ரொ­ருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்தான் நகரைச் சேர்ந்த ஷஹ்பாஸ் அஹ்மெட் என்­ப­வரே இவ்­வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு வீதி வழி­யாக ஓடி­யுள்ளார். 

இத­னை­ய­டுத்து அவ்­வ­ழி­யாகச் சென்­ற­வர்கள் அவ­ரது உடலில் பர­விய தீயை மண்ணைத் தூவி அணைத்து அவரை உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றனர்.

கடும் எரி­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி உடலில் 80 சத­வீ­த­மான பகுதி எரிந்து கரு­கிய ஷஹ்பாஸ் அஹ்­மெட்டின் உடல்­நலம் கவ­லைக்­கி­ட­மா­க­வுள்­ள­தா­க தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments