Subscribe Us

header ads

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அஹமட் மொஹமட்: அமெரிக்கவை விட்டு கட்டாரில் குடிபெயருகிறார்!

பள்ளிக்குவெடிகுண்டு கொண்டு வந்ததாக கூறி தவறுதலாக கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவன் கட்டாரில் குடியேறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள இர்விங் என்ற நகரில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த அஹமட் மொஹமட் என்ற மாணவன்,  தான் கண்டுபிடித்த மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டு வந்து ஆசிரியரிடம் காட்டினார்.

அதனை வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் 'டைம் போம்' என்று கருதிய ஆசிரியர்,  பொலிஸிற்கு தகவல் கொடுத்தார். பள்ளிக்கு வந்த பொலிஸார், மாணவன் என்றும் பார்க்காமல்,  அவனை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் உலக நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பேஸ்புக் ஸ்தாபகர்  மார்க் ஷக்கர்பெர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பொலிசார், அந்த மாணவனை விடுவித்தனர்.

இந்நிலையில் , மாணவன் அகமதுவின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கட்டார்  அரசு அஹமட் மொஹமட்டுக்கு பள்ளி படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை புலமைப்பரிசில் வழங்க முன்வந்துள்ளது. இதனால் நாங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி கட்டாரில் குடியேறப் போகிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments