கடந்த இரு தினங்களாக பேஸ்புக்கில் வலம் வரும் , மாணவர்கள் முன் முஸ்லிம் ஆசிரியர்களின் (ஆண் பெண்) குத்தாட்டம் பற்றிய வீடியோவை பலரும் பார்த்திருப்பிர்கள்..
எங்கே போகின்றது முஸ்லிம்களின் கலாச்சாரம் ???? மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்கள் முன் குத்தாட்டம் போடும் போது நாளை மாணவர்களின் நிலை ??????
இதில் என்ன கொடுமை என்றால் கணவன் ஒரு புறத்தில் குத்தாட்டம் போடும் போது மறுபுறத்தில் மனைவி மற்றொரு ஆசிரியருடன் டப்பான் கூத்து ....
இன்னுமொருவர் இலங்கை முஸ்லிம் சேவை வானொலியின் அறிவிப்பாளர் மற்றும் பாடசாலையின் உப அதிபர் ... ஊருக்கு மட்டுமே உபதேசம் ...
இன்னுமொருவர் ஒரு கேடு கெட்ட அரசியல் வாதி ஆசிரியர் ....
நெஞ்சம் பொறுக்குதில்லையே .. இது நடந்தது ஒரு கலவன் பாடசாலையில். ஆசிரியர்களே நாளை மாணவர்கள் மாணவிகளுடன் உங்கள் முன்னிலையில் இவ்வாறான ஒரு டப்பான் கூத்து போட்டால் எந்த தைரியத்தில் அவர்களை நீங்கள் கண்டிப்பீர்கள்??? பாடசாலை என்பது பாடப்புத்தகங்களை மட்டுமே கற்பிப்பது அல்ல அதிலும் மேலாக ஒழுக்கவியலை எடுத்து இயம்பும் ஓர் உன்னதமான இடம். பாடசாலையில் ஒரு சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள வழிகாட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து முஸ்லிம்களின் கலாச்சாரத்தை சீரழித்து விடாதீர்கள்.
வெட்கம் ஈமானில் பாதியாகும் ... அது சரி ஈமான் இருந்தால் தானே வெட்கம் இருக்கும். வெட்கம் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை.
தயவு செய்து முஸ்லிம் கலாச்சாரத்தையும் ஒழுக்கவியலையும் காப்பாற்றுங்கள். பாடசாலையில் இவ்வாறான நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்.
முஸ்லிம் கலாச்சார அமைச்சு மற்றும் அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் கவனத்திற்கு ....
Muhammed sufiyan.
Old Boy
ஹபாயாவுடன் மேடையில் (ஆண்களோடு) குத்தாட்டம்!!குடும்ப குத்து விழக்குகள்!!!மாணவ செல்வங்களின் வழிகாட்டிகள்!!இது ஆசிரியர் தின கொண்டாட்ட நிகழ்வாம்!மாணவர்களுக்கு முன்மாதிரியாக விழங்கும் அதிபர்,ஆசிரியர்,ஆசிரியைகள்!இதுதான் பாடசாலை தேசிய கீதம்?"வெட்கம் ஈமானின் பாதியாகும்"இவங்களுக்கு அது இருக்காமா?
Posted by Almashoora on Monday, 12 October 2015


0 Comments