Subscribe Us

header ads

ஒன்பது பாடசாலை மாணவிகள் மீது துஷ்பிரயோகம்

ஒன்பது பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அநுராதபுரம் - பதவிய – ருவன்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவிகளது பெற்றோர் காவற்துறையினரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைகழக கற்கையை பூர்த்தி செய்து தொழிலுக்காக காத்திருக்கும் இவர் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காக குறித்த பகுதி நேர வகுப்பை நடத்தியுள்ளார்.

இதன்போதே பாடசாலை மாணவிகள் சிலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாக கூறப்படும் 8 மாணவிகளும் இன்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments