Subscribe Us

header ads

குற்றம் புரி­வோரை நாம் ஒரு ­போதும் காப்­பாற்றப் போவ­தில்லை

புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு ஓரிரு தினங்­க­ளுக்குள் 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சுங்கத் திணைக்­கள அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதே போல எதிர் காலங்­களில் சகல ஊழல் மோசடிக் காரர்­களும் அகப்­பட்டுக் கொள்­வார்கள் என திறன் அபி­வி­ருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி இரா­ஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார தெரி­வித்தார். ஆன­மடு நகரில் இடம்­பெற்ற பெண்­க­ளுக்­கான சுய­தொழில் பயிற்சி நிலை­யத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது,

எவ்­வ­ள­வுதான் முறைப்­பா­டு­களைச் செய்­தாலும் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்­குழு எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­வ­தில்லை என அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்­களே ஊட­கங்­களில் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றார்கள். வர­லாற்றில் மிகப் பெரிய இலஞ்சப் பணத்தைப் பெற்ற சுங்கத் திணைக்­கள அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்­கு­ழு­வினர் செயலில் இறங்­கி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. இலஞ்சம் மற்றும் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்கள் எதிர்­கா­லங்­களில் சிக்கிக் கொள்­வார்கள்.
நாம் தொழில் ஒன்றைச் செய்­வது யாரி­டமும் கையேந்­தாமல், தலை நிமிர்ந்து வாழ்­வ­தற்­கே­யாகும். எனினும் இன்று சிலர் தனது தொழிலின் கௌர­வத்­தையும், தனது கௌர­வத்­தையும், குடும்ப உறுப்­பி­னர்­களின் கௌர­வத்­தையும் இல்­லா­ம­லாக்கிக் கொள்­கின்­றார்கள். இலஞ்சம் பெறு­வ­தற்­காக முயன்று கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் வர­லாற்றில் மிகப் பெரிய இலஞ்­ச­மாக 12 கோடி ரூபாவைப் பெற்ற சுங்கத் திணைக்­கள அதி­கா­ரிகள் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இன்னும் இருவர் இச்­சம்ப­வத்­துடன் தொடர்பு பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களும் கைது செய்­யப்­பட உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்­குழு செயற்­ப­டு­வ­தில்லை என எமது தரப்­பி­னரே இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவின் முன்னால் ஆர்ப்­பாட்­டங்­களைக் கூட நடத்­தி­னார்கள். ஆனால் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வா­னது செயற்­ப­டு­கின்­றது என்­பது தற்­போது புரி­கி­றது. புதிய உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்டு ஓரிரு தினங்­களே கடந்­தி­ருந்த நிலையில் இந்த மிகப் பெரிய இலஞ்ச வேட்டை நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.
தாம் வாழ்­வ­தற்குத் தேவை­யா­ன­ளவு உழைத்து தேவை­யற்ற செல­வு­களைக் குறைத்துக் கொள்­வோ­மே­யானால் இவ்­வாறு இலஞ்சம் பெற்று வாழ்க்­கையை பாழ்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­ய­தில்லை. இது எம் எல்­லோ­ருக்கும் ஒரு நல்ல பாடமாகும். அத்தோடு எமது நாடு நல்ல திசையில் பயணிக்கின்றது என்பதற்கும் இது ஒரு உதாரணமாகும். குற்றம் புரியும் எவரையும் நாம் பாதுகாக்கப் போவதில்லை. குற்றவாளிகள் அனைவரும் விரைவில் அகப்பட்டுக் கொள்வார்கள் என்றார்.

Post a Comment

0 Comments