Subscribe Us

header ads

கற்பிட்டி பிரதேச சபை முன்னால் தலைவர் உஹத்தின் மறைவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அனுதாபம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு இருப்பிடம் வழங்கி மக்களுடன் மக்களாக வாழ்ந்த முன்னால் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் எம்.எச் உஹத்தின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எச் உஹத் கற்பிட்டி பிரதேச சபைத்தலைவராக பலவருட காலம் கடமையாற்றியவராவார், இவர் நேற்று காலமானார்.

அஸ்வர் தனது அனுதாபச் செய்தியில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் குடியேற்றத்துக்கு முன்னின்று உழைத்த உஹத் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து 25 வருட நிறைவில் வாபாத்தாகியிருக்கிரார்.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌசில் இடம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments