"அயோக்கியர்களின் இறுதிச் தஞ்சம் தேசப்பற்று" அதேபோன்றதொரு நிலை இன்று நாட்டில் தலைதூக்கியுள்ளது. இவ்வாறானவர்களே சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற முயற்சிகளை முன்னெடுக்கின்றனர் எனக் குற்றம்சாட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்மையை கண்டறிந்து இனங்களிடையே மீளிணக்கம் ஏற்பட வேண்டுமென்பதே ஐ.நா. அறிக்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது எமது அரசின் வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனால் தேசப்பற்றாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர் எமது படையினரை நாம் பலி கொடுக்கப் போவதாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை மற்றும் ஜெனிவா தீர்மானம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், சர்வதேசத்திற்கு நாம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாததன் காரணமாகவே சர்வதேசத்தில் எமக்கு அவமானமான ஒரு நிலை தோன்றியது. இவ்வாறானதோர் நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டது. சர்வதேசம் புதிய ஆட்சியின் நல்லாட்சியை புரிந்து கொண்டது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா.வில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டிருந்த போதும் அது செப்டெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று புதிய ஆட்சி சர்வதேச விசாரணையிலிருந்தும் சர்வதேச நீதிமன்ற விசா ரணையிலிருந்தும் நாட்டை பாதுகாத்து உள்ளக விசாரணைக்கான பாதையை திறந்துள்ளது.
இது எமது அரசின் வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனால் தேசப்பற்றாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர் எமது படையினரை நாம் பலி கொடுக்கப் போவதாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
அயோக்கியர்கள் இறுதியாக தஞ்சமடையும் இடம் தேசப்பற்று என ஒரு ஆங்கிலக் கவிஞன் கூறியிருக்கின்றார். அதனைப்போன்று நாட்டுக்குள் தற்போது தேசப்பற்றாளர்கள் தலை தூக்கியுள்ளனர். இவர்கள் இனவாதத்தைப் பரப்புகின்றனர். ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஜெனிவா ஐ.நா அறிக்கைக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்த தேசப்பற்றாளர்கள் குழப்பங்களை ஏற்படுத்தினர். இவ்வாறு குழப்பத்தை ஏற் படுத்தி ஆட்சியை கைப்பற்ற இவர்கள் முயற் சிக்கின்றனர்.
0 Comments