Subscribe Us

header ads

மூன்று பேருடன் சேர்ந்து தாயைத் தாக்கிய மகன்! மட்டக்களப்பில் சம்பவம்

வயோதிபத் தாயொருவரை அவரது மகனும் மேலும் மூவரும் சேர்ந்து தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணபதி நகர் ரமேஷ்புரத்தைச் சேர்ந்த 58 வயதான பெண்ணே, மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் சகோதரி அருமைத்துரை வினோதினி இவ்விடயம் பற்றி கூறியதாவது, 

சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு கடந்த வியாழக்கிழமை வீட்டுக்கு வந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான, எனது சகோதரன் சுவேந்திரன், உடனடியாக எனது வீட்டுக்குள் புகுந்து, எனது தாய் தனியாக இருந்த வேளையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

கோயிலுக்குச் சென்றிருந்த நான், வீடு திரும்பிய போது தாய் இரத்த வெள்ளத்தில் நினைவிழந்து கிடந்தார்.

உடனடியாக தாயை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எமது தாயைத் தாக்கிய எனது சகோதரன், உதவியாக மேலும் மூவரை அழைத்துக் கொண்டு வந்து, தாயைத் தாக்கியிருப்பது தெரியவந்திருக்கிறது என்றார்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments