கடந்த அரசின் முக்கியஸ்தர்களின் பெயர்களில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள 8 கணக்குகள்தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
டொலர் வைப்புக்கள் தொடர்பான தகவல்களை யாருக்கும் மறைக்கமுடியாதென அமைச்சர் ராஜித தெரிவிக்கின்றார். மேலும் அவற்றை முடக்கி பணத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நட த்தப்பட்டு வருவதாக தெரிவிக்கும் ராஜித ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
கேள்வி- நாமல் ராஜபக்ஷ எம்.பி வங்கிக் கணக்கொன்றும் இல்லையென நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளாரே?
பதில்- நாம் நாமல் எனக் கூறவில்லையே , அவர் ஏன் பாய்கின்றார்? . இன்னும் ராஜபக்ஷக்கள் இருக்கின்றரே. மற்றைய ராஜபக்ஷக்கள் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது அவர் மட்டும் ஏன் பேசுகின்றார்.
கேள்வி- அவருக்கே, அவரது குடும்பத்தினருக்கோ வெளிநாட்டு வங்கிகளில் பணமில்லை என அவர் கூறுகின்றாரே?
பதில்- அதையும்தான் பார்ப்போமே. விசாரணைகள் தொடர்கின்றன. எவ்வளவு பணம் இருக்கின்றது என்பதைப் பார்ப்போமே. ஒரு கணக்கில் 1.086 பில்லியன் டொலர், அடுத்த கணக்கில் 1.8 பில்லியன் டொலர்கள் , ஒரு கணக்கின் 500 மில்லியன் டொலர்கள் உள்ளன.
கேள்வி- அக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவா?
பதில்- நாம் கோரிக்கை விடுத்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். அவற்றை முடக்குவதற்கு. இவை அனைத்தும் டொலர் பரிமாற்றங்கள். டொலர்களை எங்கு வைப்புச் செய்தாலும் அது தொடர்பான பதிவுகள் அமெரிக்க பெடரல் வங்கிக்கு செல்லும். அமெரிக்க
பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்தபோது டொலர்கள் எங்கு வைப்புச்செய்யப்பட்டாலும் கண்டுபிடிக்க முடியுமென சொன்னார்கள். தற்போது அவர்கள் அவற்றை எமக்கு அறியத்தந்துள்ளனர்.
டொலர் வைப்புக்கள் தொடர்பான தகவல்களை யாருக்கும் மறைக்கமுடியாதென அமைச்சர் ராஜித தெரிவிக்கின்றார். மேலும் அவற்றை முடக்கி பணத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நட த்தப்பட்டு வருவதாக தெரிவிக்கும் ராஜித ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
கேள்வி- நாமல் ராஜபக்ஷ எம்.பி வங்கிக் கணக்கொன்றும் இல்லையென நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளாரே?
பதில்- நாம் நாமல் எனக் கூறவில்லையே , அவர் ஏன் பாய்கின்றார்? . இன்னும் ராஜபக்ஷக்கள் இருக்கின்றரே. மற்றைய ராஜபக்ஷக்கள் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது அவர் மட்டும் ஏன் பேசுகின்றார்.
கேள்வி- அவருக்கே, அவரது குடும்பத்தினருக்கோ வெளிநாட்டு வங்கிகளில் பணமில்லை என அவர் கூறுகின்றாரே?
பதில்- அதையும்தான் பார்ப்போமே. விசாரணைகள் தொடர்கின்றன. எவ்வளவு பணம் இருக்கின்றது என்பதைப் பார்ப்போமே. ஒரு கணக்கில் 1.086 பில்லியன் டொலர், அடுத்த கணக்கில் 1.8 பில்லியன் டொலர்கள் , ஒரு கணக்கின் 500 மில்லியன் டொலர்கள் உள்ளன.
கேள்வி- அக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவா?
பதில்- நாம் கோரிக்கை விடுத்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். அவற்றை முடக்குவதற்கு. இவை அனைத்தும் டொலர் பரிமாற்றங்கள். டொலர்களை எங்கு வைப்புச் செய்தாலும் அது தொடர்பான பதிவுகள் அமெரிக்க பெடரல் வங்கிக்கு செல்லும். அமெரிக்க
பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்தபோது டொலர்கள் எங்கு வைப்புச்செய்யப்பட்டாலும் கண்டுபிடிக்க முடியுமென சொன்னார்கள். தற்போது அவர்கள் அவற்றை எமக்கு அறியத்தந்துள்ளனர்.


0 Comments