Subscribe Us

header ads

கல்பிட்டி நகரமும் அதனை அண்டிய கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம்

கல்பிட்டி நகரமும் அதனை அண்டிய கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது ...

கல்பிட்டி நகரை பொறுத்த வரை இங்கு மக்கள் செறிவாக வாழ்கின்றனர் , அதோடு வட புல மக்களும் இணைந்துள்ளனர் ...

ஆக , மக்கள் தொகைக்கு ஏற்ப இங்கு நீர் வளம் இல்லை , அதே நேரம் மக்கள் தொகை அதிகம் என்பதால் மலசல கூடங்களும் , கிணறுகளும் அருகருகே அமைந்துள்ளது இதனால் நீர் மாசடைந்துள்ளது.

அதேநேரம் இங்குள்ள ஏனைய பகுதிகளும் விவசாய பிரதேசம் என்பதால் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் இரசாயான பசளை பாவனை மூலமும் நில நீர் பாதிப்படைந்து குடி நீர் பாவனைக்கு எற்புடையதாய் இல்லை (உதாரணம் - முதலைப்பாளி ,முசல்பிட்டி )..

இவ்வாறான விடயங்களால் இதனை பாவிக்கும் மக்கள் சிறுநீரக பாதிப்பு உற்பட பல பாதிப்புகளை அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாகி உள்ளார்கள்

இதனை கருத்தில் கொண்டு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் .

இதன் பயனாக சவூதி அரசின் நிதி உதவிகளோடு இப்பகுதி மக்களுக்கு தூய நீர் பெற்றுகொடுக்கும் முஸ்தீபுகள் மேற்கொள்ள படுகிறது ...

-ஊடக பிரிவு -
எஸ்.எச்,எம்.நியாஸ் 
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்

Post a Comment

0 Comments