Subscribe Us

header ads

கருணாரத்னவின் சதத்தின் உதவியுடன் வலுவான நிலையில் இலங்கை

கரு­ணா­ரத்ன மற்றும் சந்­தி­மாலின் அபார ஆட்­டத்­தினால் முதல் இன்­னிங்ஸை வலுப்­ப­டு­திக்­கொண்­டது இலங்கை அணி.

இலங்கை –- மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டை­யி­லான டெஸ்ட் போட்­டியில் திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் சந்­தி­மாலின் அபார ஆட்­டத்­தினால் இலங்கை அணி 2 விக்கெட் இழப்­பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்­றுக்­கொண்­டது.
நேற்று காலியில் ஆரம்­ப­மான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. அதன்­படி கள­மி­றங்­கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் சில்வா ஆகியோர் நிதா­ன­மாக ஆடிக்­கொண்­டி­ருக்க 17 ஓட்­டங்­க­ளுடன் சில்வா ஆட்­ட­மிழந்தார்.
அதன்­பி­றகு கள­மி­றங்­கிய திரி­மான்­னவும் 16 ஓட்­டங்­க­ளுடன் வெளியே­றினார். மறு­மு­னையில் சிறப்­பாக ஆடிக்­கொண்­டி­ருந்த கருணாரத்னவுடன் ஜோடி சேர்ந்தார் சந்­திமால். இந்த இரு­வரும் நிதா­ன­மா­கவும் அதி­ர­டி­யா­கவும் ஆடி, நேற்­றைய ஆட்ட நேர முடி­வின்­போது 250 ஓட்­டங்­களை அணிக்­காக சேர்த்­தனர்.
அபா­ர­மாக ஆடிய கரு­ணா­ரத்­ன 135 ஓட்­டங்­களை விளா­சினார். மறு­மு­னையில் நின்ற சந்­திமால் 72 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். இந்த இருவரும் ஆட்டமிழக் காமல் களத்தில் இருக்கின்றனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.

Post a Comment

0 Comments